தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணி உடையும்: அமைச்சர்
கும்மிடிப்பூண்டி:
சட்டசபை இடைத் தேர்தலுக்குப் பின்னர் திமுக தலைமையிலான 7 கட்சிக் கூட்டணி உடைந்து சிதறும் என்று அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் விஜயக்குமாரை ஆதரித்து ஊத்துக்கோட்டையில் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், இடைத் தேர்தலுக்குப் பின்னர் திமுக தலைமையிலான 7 கட்சி கூட்டணி உடைந்து சிதறப் போகிறது. அந்தக் கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் போயஸ் கார்டன் கதவைத் தட்டப் போகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி தொகுதியில், எங்கு பார்த்தாலும் இரட்டை இலைக்குத்தான் அலை அடிக்கிறது. கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சலுகைகள் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களது ஆதரவு இரட்டை இலைக்குத்தான். வேட்பாளர் விஜயக்குமார் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார் ஜெயராமன்.












Click it and Unblock the Notifications