ஊட்டியில் அரசு ஊழியர்களுக்கு சலுகை வாடகையில் விடுதி!
சென்னை:
ஊட்டியில், அரசு ஊழியர்களுக்காக புதிய தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு சலுகை கட்டணத்தில் தங்கிக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள சாஸ்திரி பவன் உதவி எஸ்டேட் மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசு, மாநில அரசு, தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர், ஊட்டியில் சலுகை கட்டணத்தில் தங்க விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. விடுமுறையில் ஊட்டிக்குச் செல்வோர் தங்கள் குடும்பத்துடன் இந்த விடுதியில் உள்ள அறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இரு நபர் படுக்கை அறைக்கான வாடகை (நாள் ஒன்றுக்கு) விவரம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 46, மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ. 106, அவர்களுடன் வரும் தனி நபர் ஒவ்வொருவருக்கும் ரூ. 171.
8 படுக்கைகள் கொண்ட அறைக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 144, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ரூ. 224, உடன் வருபவர்களுக்கு தலா ரூ. 544.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கான கட்டணமே வசூலிக்கப்படும்.
இந்த விடுதியில் தங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications