இடைத் தேர்தல்: வைகோ 8 நாட்கள் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து 8 நாட்கள் பிரசாரம் செய்யப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதையடுத்து காஞ்சிபுரம் சட்டசபைத் தொகுதியில் 4 நாட்களும், கும்மிடிப்பூண்டியில் 4 நாட்களும் பிரசாரம் செய்யவுள்ளேன். மே 3ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை எனது பிரசாரம் 8 நாட்களுக்கு நடைபெறும்.
நாடாளுமன்றத்தை முடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் போக்கு சரியானதல்ல. பிரதமர் கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தவறானதாகும். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications