ஜெனீவா சென்றார் கலாம்
ஜெனீவா:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று ஜெனீவா சென்றடைந்தார். விமான நிலையத்தில் கலாமை சுவிட்சர்லாந்தின்வெளியுறவு அமைச்சர் வரவேற்றார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் இருந்து சுவிட்சர்லாந்து சென்றார். ஜெனீவா விமானநிலையத்தில் குடியரசுத் தலைவர் கலாமை சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சர் மிஸ்செலி கால்மி மற்றும் உயரதிகாரிகள்வரவேற்றனர்.
இந்த மையத்திற்கு செல்லும் வழியில் பிரான்ஸிலும் அவர் சுமார் 45 நிமிடங்கள் இருந்தார். பின் ஆராய்ச்சி மையம் சென்ற அவர்,அங்குள்ள விஞ்ஞானிகளை அவர் சந்தித்து பேசினார்.
இதற்கிடையே நேற்று ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஆர்க்டிக் மற்றும் அன்டார்டிக் ஆய்வு மையத்தை அப்துல் கலாம்பார்வையிட்டார். அங்குள்ள விஞ்ஞானிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
அவர்களிடம் பேசுகையில், நிலநடுக்கம், சுனாமி மற்றும் இயற்கை பேரழிவுகளை கணிப்பது குறித்த விஞ்ஞான அறிவைஅனைத்து நாடுகளும் பரிமாறிக் கொள்ள வேண்டும். இதில் விஞ்ஞானிகள் கூட்டாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அன்டார்டிக் கண்டத்தில் இந்திய மையம் அமைக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி அங்கு இந்தியாஅமைக்கவுள்ள ஆய்வு மைய திட்டத்தில் ரஷ்ய விஞ்ஞானிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் கலாம் கேட்டுக் கொண்டார்.