For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்பத்துடன் தொழிலதிபர் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

நாகர்கோவிலைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி, மகனோடு தற்கொலைசெய்துகொண்டார்.

நாகர்கோவில் கிறிஸ்டோபர் காலனியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். இவருக்குசீதா என்ற மனைவியும், 4 வயதில் விஜய் மாதவன் என்ற மகனும் இருந்தனர்.

நேற்று காலை இவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. காலை வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தில்உள்ளோர் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது படுக்கையறையில் 3 பேரும் பிணமாக கிடந்தனர். 3 பேரும் விஷம் கலந்த பிஸ்கட்டை சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்தது.

குடும்பப் பிரச்சினை காரணமாகவே பாலகிருஷ்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X