புகை பிடிக்கும் காட்சிக்குத் தடை:திரைத்துறை அதிருப்தி
சென்னை:
திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளைத் தடை செய்ய மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளதற்குதிரைப்படத் துறையினரிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் தடை செய்யப்படும் என மத்தியசுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதற்கு திரைத் துறையினரிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
நடிகர் விவேக் கூறுகையில், இந்த முடிவு நல்லதா, கெட்டதா என்று தெரியவில்லை. பொதுவாக சர்ச்சைக்குரிய, விவாதத்திற்குரியவிஷயம். இப்போது பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை உள்ளது. ஆனால் விற்பதற்கு தடை இல்லை. தடை இருந்தும்எத்தனையோ ஆயிரக்கணக்கான பேர் சிகரெட் பிடிக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது திரைப்படங்களில் மட்டும் புகை பிடிக்கக் கூடாது என்று கூறுவது பொருத்தமானதாக இல்லை. சிகெரட்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று அரசு சொல்கிறது. ஆனால் அதே அரசே, புகையிலை, சிகரெட் விற்பனையைதடுக்கவில்லை.
ஹீரோக்களைப் பார்த்துத்தான் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கப் பழகுகிறார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. பிடிக்க வேண்டும்என்று ஒருவர் முடிவு செய்து விட்டால் கண்டிப்பாக அவர் சிகரெட் பிடிப்பார். அதை யாராலும் தடுக்க முடியாது.
ஹீரோக்கள் சிகரெட் மட்டும்தானா பிடிக்கிறார்கள். எத்தனையோ விஷயங்களைச் செய்கிறார்கள். அதை யாராவதுபின்பற்றுகிறார்களா? படத்தில் சிகரெட் பிடிப்பது போல நடிக்கும் எத்தனையோ நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் புகையின் பக்கமேபோகாதவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்த முடிவு சரியானது என்று நான் கருதவில்லை என்று கூறுகிறார்விவேக்.
இயக்குநர் பாரதிராஜாவும் இதே கருத்தையே வெளிப்படுத்துகிறார். ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் கெட்டுப்போகிறார்கள் என்ற கருத்தைஏற்கவே முடியாது. சினிமாவில் ஹீரோவும், ஹீரோயினும் கவர்ச்சியாக ஆடிப் பாடுகிறார்கள்.அதேபோல,யாராவது தெருவில் வந்து ஆடுகிறார்களா? சிகரெட் பிடிப்பது, ஆரோக்கியக் கேடு என்று மத்தியஅரசு நினைத்தால்முதலில் விற்பனையைத் தடை செய்ய வேண்டும். அதை விடுத்து திரைத் துறையை குறி வைக்கக் கூடாது என்றார் காட்டமாக.
அதேசமயம், சத்யராஜ், வடிவேலு உள்ளிட்ட சிலர் இத்தடைக்ைகு வரவேற்பு அளித்துள்ளனர். இது நல்ல விஷயம்தான் என்றுஅவர்கள் கூறுகிறார்கள்.
மத்திய சுகாதாரத்துறையின் இந்த திடீர் தடையுத்தரவு, ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களை மனதில் வைத்துபிறப்பிக்கப்பட்டுள்ளதாகவே திரைத் துறையினர் மத்தியில் பொதுவான கருத்து நிலவுகிறது.












Click it and Unblock the Notifications