ஒகனேக்கலில் வெள்ளம்; குளிப்பதற்குத் தடை!
கிருஷ்ணகிரி:
காவிரியில் அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஒகனேக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி, ஒகனேக்கலில் தான் முதலில் காலடி எடுத்து வைக்கிறது.தற்போதுகர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருவதாலும், கபினி அணை திறக்கப்பட்டுள்ளதாலும், காவிரியில் அதிக அளவில்நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒகனேக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும்,பரிசல்களை இயக்குவதற்கும், மீன் பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 22,235 ஆக உள்ளது. அணையின் நீர் மட்டம் 56.33அடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம், கபினியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கன அடியாககுறைக்கப்பட்டுள்ளது.