கொலம்பியா: கப்பல் மூழ்கி 104 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
குயிடோ:
தென் அமெரிக்க நாடான கொலம்பியா அருகே பசிபிக் கடலில் ஈக்வடார் நாட்டுக் கப்பல் மூழ்கியதில் அதில் பயணம் செய்த104 பேர் நீரில் மூழ்கி பலியாயினர்.
ஈக்வடார் நாட்டில் இருந்து கொலம்பியாவில் குடியேற சட்ட விரோதமாக கப்பலில் வந்தபோது இந்த விபத்து நடந்தது. அந்தக்கப்பல் மூழ்கியதில் அதிலிருந்த 113 பேரில் 104 பேர் பலியாகிவிட்டனர்.
9 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்களும் சட்ட விரோதமாகக் குடியேற முயன்றதற்காக தண்டனை பெறுவார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன் தினம் தான் கொலம்பியா- வெனிசுவேலா எல்லையில் விமானம் விபத்துக்குள்ளாகி நூற்றுக்கும் அதிகமானோர்பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications