விநாயகர் சதுர்த்தி: ஜெ. வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளவாழ்த்துச் செய்தியில், நமது நாட்டு மக்கள் தொன்று தொட்டு முழு முதற் கடவுளாக துதிக்கப்பட்டு வரும் விநாயகப் பெருமானின்திரு அவதாரத் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் எல்லா மக்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.சகல கணங்களுக்கும் தலைவர் என்பதால் கணபதி, விக்கினங்களைப் பொடிப் பொடியாக்குபவர் என்பதால் விக்னேஷ்வர் எனவிநாயகரின் பெருமைகளை எடுத்துக் காட்டும் விதத்தில் வ்ெவேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் அவரைப் பிள்ளையார்என்று அன்போடு அழைப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறது தமிழகம்.
பாலை, தேனை, பாகை, பருப்பை இப்படி நான்கு பொருளைத் தந்து பிள்ளையாரிடம் மூன்று தமிழ் கேட்டார் அவ்வை.வேண்டியதை வேண்டியாங்கு விரைந்து வழங்கும் யானை முகத்தோன், அவரை வழிபடுவோருக்கு கற்பகக் கடவுளாகவிளங்குகிறார்.
வேழ முகத்து விநாயகப் பெருமானின் அருளாள் உலகத்தில் அமைதி நிலவட்டும். அனைவருக்கும் எல்லா நலமும், வளமும்பெருகட்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications