குஷ்புவைத் தண்டிக்கக் கோரி வழக்கு!
சென்னை:
தமிழ்ப் பெண்கள் குறித்து அவமரியாதையாக கருத்துத் தெரிவித்துள்ள நடிகை குஷ்புவைத் தண்டிக்கக் கோரி சென்னைநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தீபன் ஜெயக்குமார் என்பவர் இது தொடர்பாக சென்னை எழும்பூர் 14வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குதாக்கல் செய்துள்ளார்.இதுகுறித்து அவரது வழக்கறிஞர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்களும் திருமணத்திற்கு முன்பே பாலியல்உறவு வைத்திருப்பார்கள். அப்படி இல்லாத பெண்களே கிடையாது என்றரீதியில் குஷ்பு பேசியுள்ளார்.
இந்தக் கருத்து கலாச்சாரத்துடன் வாழும் தமிழக பெண்களை புண்படுத்தியுள்ளது. பெரும் மன உளைச்சலைக் கொடுத்துள்ளது.தமிழ்ப் பெண்களை தனது கருத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக களங்கப்படுத்தி விட்டார் குஷ்பு.
எனவே அவரை இந்திய தண்டனைச் சட்டத்தின் 499, 500வது பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்தத் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்கத்துக்கு பெண்கள் நோட்டீஸ்:
இதற்கிடையே குஷ்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என திருச்சியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சங்கத் தலைவர் விஜய்காந்த், செயலாளர் சரத்குமார் ஆகியோருக்கு வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி,ஜெயலட்சமி, கோமதி ஆகியோர் அனுப்பியுள்ள நோட்டீசில்,
குஷ்புவின் பேச்சு ஒவ்வொரு தாயின் மனதையும் புண்படுத்திவிட்டது. அவர்களை அவமானத்தில் தலை குனிய வைத்துள்ளது.பெண்மைக்கு இழிவை ஏற்படுத்திய குஷ்பு, இந்திய-தமிழ் கலாச்சாரத்தையும் கேவலப்படுத்திவிட்டார். இவரைப் போன்ற ஒருஉறுப்பினர் உங்களுக்குத் தேவை தானா?. எனவே அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும்.
இல்லாவிட்டால் குஷ்புவுக்கு நடிகர் சங்கமும் துணை போவதாகவே கருதப்படும். அதற்கான விளைவுகளையும் நீங்கள் சந்திக்கவேண்டி வரும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications