For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஜி பாஜக அமைச்சரை சுட்டவர் விஎச்பி ஆதரவாளர்?

By Staff
Google Oneindia Tamil News

பாட்னா:

மாஜி பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாதை துப்பாக்கியால் சுட்டவர் பெயர் முன்னா ராய் என்றும் அவர் தீவிர விஸ்வ இந்து பரிஷத்ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

பிகாரில் சஸராம் என்ற இடத்தில் பிரமோத் மகாஜனுடன் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பிரசாத் சுடப்பட்டார்.அவரை சுட்ட ராயை பாஜக தொண்டர்கள் தாக்கியதில் அவர் கோமா நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் அவரது சட்டைப் பையில் இருந்து கிடைத்த ஆதராங்களின் அடிப்படையில் ராய் ஒரு விஎச்பி ஆதரவாளர் என்றுதெரியவந்துள்ளதாக பிகார் மாநில உள்துறைச் செயலாளர் சிரோகி கூறியுள்ளார்.

ஆனால், இதை விஎச்பியும் பாஜகவும் கடுமையாக மறுத்துள்ளன.

உள்துறைச் செயலாளர் சிரோகிக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக பிரமோத் மகாஜன் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

ராயின் பையில் இருந்த கடிதத்தில், பகத் சிங், ராஜ்குரு, குருதேவ் ஆகிய தேசப்பற்றாளர்களைப் பின்பற்றி இந்த அதிகாரத் தரகர்களை(அரசியல்வாதிகளை) ஒழிப்பேன். இந்தத் தாக்குதலுக்குப் பின் நான் உயிரோடு இருக்க மாட்டேன். தேசிய நலனுக்காக நான் இந்ததற்கொலைத் தாக்குதலை நடத்துகிறேன் என்று எழுதப்பட்டுள்ளது.

ரவிசங்கரையும் பிரமோத் மகாஜனையும் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்யும் முடிவுடன் ராய் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத்தெரிகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்தத் தாக்குதல் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் பிகார் முதல்வரும் ரயில்வேஅமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கோரியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X