மனு மழை பொழிந்த பஞ். தலைவருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
மதுரை:
அடுத்தடுத்து மனுக்களாக தாக்கல் செய்த பஞ்சாயத்துத் தலைவருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடும்கண்டனம் தெரிவித்து, ரூ. 10,000 அபராதம் விதித்தது.
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துத் தலைவர் பிலோமின் ராஜ். திமுகவைச் சேர்ந்தவர்.இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதிமுருகேசன் விசாரித்தார். அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிலோமின் ராஜ் ஒரேபிரச்சினைக்காக பலமுறை மனு செய்துள்ளார்.
அந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விடாமல் தொடர்ந்து மனுக்களாக தாக்கல்செய்து வருகிறார் என்று குறிப்பிட்டார்.
இதைக் கருத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதி முருகேசன், மனுக்கள் தொடர்ந்து நிராகக்கப்பட்டு வரும் நிலையில்மறுபடியும் மறுபடியும் மனுக்கள் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தையும், நீதிமன்றத்தையும் துஷ்பிரயோகம்செய்துள்ளார் பிலோமின்ராஜ்.
அவருக்கு இந்த நீதிமன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. நீதிமன்ற நேரத்தை துஷ்பிரயோகம்செய்தமைக்காக அவருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications