10வது வகுப்பு தேர்வு முன் கூட்டியே வரலாம்
சென்னை:
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாத வாக்கில் தேர்தல் நடைபெறக் கூடிய சூழ்நிலை உள்ளதால் முன்கூட்டியேபத்தாவது மற்றும் பண்ணிரெண்டாவது வகுப்புத் தேர்வுகளை நடத்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் ஆயுள்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.இதையடுத்து முன் கூட்டியே பொதுத் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது. அனேகமாக ஏப்ரல் மாதத்தொடக்கத்தில் தேர்தல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் தான் பொதுவாக பத்தாவது மற்றும் பிளஸ் டூ தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தமுறை சட்டசபைத் தேர்தல் குறுக்கிடுவதால் இரு தேர்வுகளையும் முன் கூட்டியே நடத்தலாம் எனமாணவர்களும், பெற்றோர்களும் கருதுகின்றனர்.
இது தொடர்பாக பள்ளித் தேர்வுத் துறை இயக்குநர் ஜெகன்னாதன் கூறுகையில், முன்கூட்டியே இருதேர்வுகளையும் நடத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சட்டசபைத் தேர்தல் தேதி குறித்து உறுதியாக தெரிந்தால் தான் பத்தாவது, பிளஸ் டூ தேர்வுகள் குறித்து முடிவுசெய்ய இயலும். இருப்பினும் தேர்வுகள் நடக்கும் கால கட்டத்தில் பொதுத் தேர்தல் குறுக்கிட்டால் அதுதொடர்பாகபரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வந்தால், 10 மற்றும் 12வது வகுப்புப் பொதுத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக ஆசிரியர்கள் மத்தியிலும் கருத்துநிலவுகிறது.












Click it and Unblock the Notifications