பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஆவணம்
பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து புதுவை நீதிமன்றத்திடம் இன்றுஒப்படைக்கப்பட்டன.
ஜெயேந்திரர் தனது மீதான சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை தமிழகத்திலிருந்து வெளி மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்படி ஜெயேந்திரரின் வழக்குகளை புதுவை நீதிமன்றத்திற்கு மாற்றிஉச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.இந்த நிலையில் புதுவை நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் 28ம் தேதி தொடங்கவுள்ளது. எனவேவழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து புதுவை அமர்வுநீதிமன்றத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
புதுவை அமர்வு நீதிமன்ற அலுவலக பணியாளர்கள் ஆவணங்களை சரிபார்த்து பெற்றுக் கொண்டனர். வரும்திங்கட்கிழமையன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, கதிரவன்,அப்பு, அப்ரூவர் ரவி சுப்பிரமணியன் உள்ளிட்ட 24 பேர்கள் ஆஜராகின்றனர்.
இந்த வழக்கில் ஆஜராக வசிதியாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் விழுப்புரம் சங்கர மடத்தில் தங்குவதற்கு முடிவுசெய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications