புலிகளுடன் பேசத் தயார்: ராஜபக்ஷே
குருவாயூர்:
விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே கேரளத்தில் இன்றுநிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள ராஜபக்ஷே இன்று தனது மனைவி ரேஷ்மியுடன் டெல்லியில் இருந்து இன்று கொச்சி வந்தார். அங்கிருந்துஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் புறப்பட்டுச் சென்றார்.அங்குள்ள கிருஷணர் ஆலயத்தில் அவர்கள் வழிபாடு நடத்தினர். 2.5 அடி உயரமுள்ள குத்துவிளக்கை ஏற்றி வைத்து,துலாபாரத்தில் பங்கேற்றார். தனது எடைக்கு எடைக்கு நெய்யை கோவிலுக்கு ராஜபக்ஷே வழங்கினார்.
வழிபாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்த நிருபர்களிடம் பேசிய அவர், புலிகளுடன் பேசத் தயாராக இருக்கிறோம். எனதுஇந்தியப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது என்றார்.
இதையடுத்து மீண்டும் கொச்சி திரும்பிய ராஜபக்ஷே அங்கிருந்து கொழும்பு செல்கிறார்.
இவரது வருகையையொட்டி கொச்சி சர்வதேச விமான நிலையத்திலும், குருவாயூரிலும் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
ராஜபக்ஷேவுடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவும் குருவாயூர் சென்றார்.
முன்னதாக தனது சென்னை பயணத் திட்டத்தை ராஜபக்ஷே ரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications