For Daily Alerts
Just In
பதவியைப் பறித்தால் வழக்கு: கராத்தே
சென்னை:
கவுன்சிலர் மற்றும் துணை மேயர் பதவியை பறித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்று சென்னை மாநகராட்சி துணைமேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.தலைமறைவாக உள்ள கராத்தே தியாகராஜன் தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் உள்ளதால் அவரது பதவியைப்பறிக்கும் வகையில் தற்போதைய மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டு வர அதிமுக திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கராத்தே தியாகராஜன் தொலைபேசி மூலம் தெரிவிக்கையில், மாநகராட்சி கூட்டத்தைக் கூட்ட ஆணையருக்குஅதிகாரம் இல்லை என்று கூறி நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு தான்கூறப்பட்டுள்ளது. இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
எனவே எனது உறுப்பினர் பதவியை பறிக்க முடியாது. ஒரு வேளை எனது பதவி பறிக்கப்பட்டால், தீர்ப்பு பாதகமாக வந்தால்அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார் கராத்தே.
Story first published: Wednesday, February 1, 2006, 5:30 [IST]