குஷ்பு புகார்: விசாரணை தீவிரம்- கமிஷனர்
சென்னை:
மேக்ஸிம் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்ட நடிகை குஷ்புவின் ஆபாசப் படம் தொடர்பான புகாரின் பேரில் தீவிர விசாரணைநடந்து வருவதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.
டூ பீசில் இருக்கும் ஒரு ஆங்கில மாடலின் முகத்தை மட்டும் வெட்டிவிட்டு அதற்குப் பதிலாக குஷ்புவின் படத்தை ஒட்டி மேக்சிம்இதழ் ஒரு படத்தை வெளியிட்டிருந்தது. பாத்ரூம் கண்ணாடியில் தன்னைப் பார்ப்பது போன்ற படம் அது. கற்பு விஷயத்தில்எல்லோருக்கும் டென்சன் கொடுத்த குஷ்புவுக்கே டென்சனை தந்துவிட்டது மேக்சிம்.
இதையடுத்து கடுப்பான குஷ்பு, அந்தப் பத்திரிக்கை மீது புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீஸ் கமிஷ்னர் நட்ராஜ், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகை குஷ்பு கொடுத்துள்ள புகாரின்பேரில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரை மொத்தம் 145 மேக்ஸிம் பத்திரிகைகளை பறிமுதல் செய்துள்ளோம்.அந்த பத்திரிக்கையின் பதிப்பாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்துவோம். தொடர்ந்து நடவடிக்கை இருக்கும்.
வி.என்.சுதாகரன் (முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன்-சசிகலாவின் அக்காள் மகன்- சிவாஜி குடும்பத்து மருமகன்)மீது, பிரியா நாயர் என்பவர் கொடுத்துள்ள புகார் குறித்தும் விசாரித்து வருகிறோம்.
சென்னை நகரம் தீவிர பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளது. எனவே தீவிரவாதத் தாக்குதல் குறித்து பொது மக்கள் பயப்படத்தேவையில்லை என்றார் நடராஜ்.












Click it and Unblock the Notifications