For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிபதியைக் கட்டிப் போட்டு துணிகர கொள்ளை

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே முன்னாள் நீதிபதியையும், அவரது மகனையும் கட்டிப் போட்டு விட்டு நகை, பணம்கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் பழனிச்சாமி. ஓய்வு பெற்ற பின்னர் அந்தியூர் அருகே உள்ளகுட்டப்பாளையம் என்ற தனது சொந்த ஊரில் பண்ணை வீட்டில் வசித்து வந்தார் பழனிச்சாமி. இவரது மகன்அமெரிக்காவிலிருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பழனிச்சாமியும், அவரது மகனும் வீட்டில் தனியாக இருந்த போது, நேற்று இரவு அடையாளம் தெரியாத சிலநபர்கள் வீட்டில் புகுந்துள்ளனர்.

பழனிச்சாமியையும், அவரது மகனையும் எழுப்பி கை, கால்களைக் கட்டி ஒரு அறையில் போட்டுப் பூட்டினர். பின்னர் வீட்டில்இருந்த நகைகள், பணம், விலை உயர்ந்த பல வெளிநாட்டுப் பொருட்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.

கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இந்தியில் பேசியுள்ளனர். எனவே அவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கும்என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து அறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி, டிஐஜி, மாவட்டகாவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X