தொங்கு சட்டசபை வரப் போகிறது-விஜயகாந்த்
சிவகங்கை:
கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்று கூறும் திமுக அதைமுன்பே செய்யாதது ஏன் என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கையில், போட்டியிடும் தேசிய முற்போக்கு திராவிடக் கழக வேட்பாளர்களைசிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி வைத்து விஜயகாந்த்பேசுகையில்,திமுக தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுள்ளன.ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம், 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி எனஅறிவித்துள்ளனர்.
தொடர்பான செய்திகள்பு இருந்த திமுக ஆட்சிக்காலத்தில் இதை ஏன் அவர்கள் செய்யவில்லை?இப்போது மட்டும் செய்யப் போவதாக கூறுவது ஏன்? அவர்கள் அப்போதேநிலத்தைக் கொடுத்திருந்தால் இப்போது அவற்றில் விளைச்சலைப் பார்த்திருக்கலாமே!ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் சொல்லி மக்களை ஏமாற்றுவதா?
நான் சுத்தமானவன். சொந்தப் பணத்திலிருந்துதான் கட்சியை நடத்துகிறேன். ஏழைமக்கள் வாழ்க்கை முழுவதும் வறுமையைத்தான் பார்க்கிறார்கள். அந்த வறுமையைஒழிக்க தேவையான திட்டத்தை நான் தயாரித்துள்ளேன்.
அதை வெளியில் சொல்ல மாட்டேன். சொன்னால் மற்ற கட்சிகள் காப்பி அடித்துவிடுவார்கள்.
இந்தத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவானால் நான் ஆட்சி அமைப்பது நிச்சயம்நடக்கும். இப்போதைய நிலையில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் பிரகாசமாகஉள்ளன என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications