நடராஜை மாற்ற தேர்தல் ஆணையம் மீண்டும் உத்தரவு
டெல்லி
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை இடமாற்றம் செய்யும்படி தமிழகஅரசுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டிப் பேசிய காவல்துறை ஆணையர் நடராஜைஇடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்துதமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இதில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது என்றுஉயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் தேர்தல் கமிஷனுடன் பேசி இந்தவிவகாரத்துக்கு தீர்வு காண தமிழக அரசு முன் வர வேண்டும் என உயர் நீதிமன்றம்அறிவுறுத்தியது.
ஆனால், அதை தமிழக அரசு மதிக்கவில்லை. தேர்தல் ஆணையத்துடன் தமிழக அரசுஎந்த ஆலோசனையும் நடத்த நடவடிக் எடுக்கவில்லை.
இதையடுத்து நடராஜ் மாற்றத்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில், ஆணையர் நடராஜை இடமாற்றம் செய்யுமாறு தமிழக அரசுக்குதேர்தல் ஆணையம் மீண்டும் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள ஒரு உத்தரவில்,சென்னை மாநகர ஆணையர் நடராஜ் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
அவருக்குப் பதில் புதிய ஆணையரை நியமிப்பதற்கு வசதியாக மூன்று ஐ.பி.எஸ்.அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வரும் 18ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்துள்ள நிலையில்,மீண்டும் ஆணையர் விவகாரத்தை தேர்தல் ஆணையம் தூசி தட்டி எடுத்துள்ளது புதியபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications