நாளை கருணாநிதி- மதிமுகவினர் வேட்பு மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி தனது முதல் கட்ட வட மாவட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு இன்று முதல் 2 ாட்கள் தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.
முதல் கட்டமாக கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்த கருணாநிதி, நேற்றுதிருச்சியிலிருந்து ரயில் மூலம் சென்னை திரும்பினார்.இன்று மாலை 4 மணிக்கு சேப்பாக்கம் தொகுதியில் தனது பிரசாரத்தைத்தொடருகிறார். இன்றும், நாளையும் அவர் சேப்பாக்கம் தாகுதியில் வீதி வீதியாகசென்று பிரசாரம் செய்கிறார்.
நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் கருணாநிதி. வேட்பு மனு தாக்கல்செய்த பின்னர் மீண்டும் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வாக்குசேகரிக்கிறார்.
இதேபோல திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும் நாளை வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். திமுக வேட்பாளர்களும் பெரும்பாலானவர்களும்நாளையே மனு தாக்கல் செய்கிறார்கள்.
இதேபோல மதிமுக வேட்பாளர்கள் 35 பேரும் நாளை வேட்பு மனு தாக்கல்செய்யவுள்ளனர்.












Click it and Unblock the Notifications