ஜெவை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்-அன்புமணி
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளைத் திறந்த ஜெயலலிதாவை பெண்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பாமக வேட்பாளர்இளவழகன், ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் காந்தி ஆகியோரைஆதரித்து அன்புமணி பேசுகையில்,சட்டசபைத் தேர்தல் மூலம் மக்கள் மாற்றத்தைக் காண காத்துள்ளனர். மக்கள் மத்தியில்குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் எழுச்சி காணப்படுகிறது.
பெண்களிடம் ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. வீட்டுக்கு வீடு,தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளை திறந்த ஜெயலலிதாவை பெண்கள் மன்னிக்கமாட்டார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா செய்ததுதான் என்ன? வைகோவை பொடாசட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் அடைத்ததுதான். வைகோ அதை மறந்து அங்குபோய் விட்டார்.
வைகோ எதற்காகவோ அதை மறந்திருக்கலாம். ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள்என்றார் அன்புமணி.












Click it and Unblock the Notifications