ஜூன் 5ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாவது வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது.
கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரை பத்தாம் வகுப்புத்தேர்வுகள் நடந்தன. இந்தத் தேர்வை 7,24,913 மாணவ, மாணவியர் எழுதினர். தனித்தேர்வர்களையும் சேர்த்து மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.இதுதவிர மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளும், ஓ.எஸ்.எல்.சி.தேர்வும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தன.
விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்துவந்தது. இப்போது அந்தப் பணிகள் முடிவடைந்துள்ளன.
இதையடுத்து ஜூன் 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இதுகுறித்துதேர்வுகள் துறை இயக்குனர் ஜெகன்னாதன் கூறுகையில், ஜூன் 5ம் தேதிதிங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications