நாளை முதல் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி திருவிழா
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை தொடங்குகிறது.
இந்நாள் முருகப் பெருமான் பிறந்த நாளாக கொண்டாடபடுகிறது.வைகாசி விசாககத்தையொட்டி நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கபடுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபதீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்தாண்ட அபிஷேகமும் நடை பெறும்.
காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை 3 மணிக்கு பிரதோச அபிஷேகமும் நடக்கும்.இதைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு முனிமார்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் எழுந்தருளி கிரி வீதி உலா வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுத்துவிட்டு திருக்கோவிலுக்கு செல்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற உடை அணிந்து காவடி எடுத்துவேல்குத்தி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி திருச்செந்தூர் முழுவதும் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications