கழுதையை கைது செய்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

வீட்டு மனை பட்டா கோரி கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் காஞ்சிபுரத்தில்நடத்தப்பட்டது. இதையடுத்து கழுதை உள்பட 50 பேரை போலீஸார் கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மக்கள் மன்றம், மண்ணின் மைந்தர் கழகம் ஆகியவை இணைந்து இருளர்சமூகத்தினருக்கு வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்திருந்தன. ஆனால் அந்த மனு மீது நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.

Magalakshmi with her Donkey
தனது கழுதையுடன் மகாலட்சுமி

இதையடுத்து நூதனப் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்தனர்.இதைத் தொடர்ந்து ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே கழுதையிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் போராட்டம் நடத்தியவர்களைக் கைதுசெய்தனர். பின்னர் அவர்களில் 8 பேரையும், அந்த கழுதையையும் நீதிமன்றத்திற்குஅழைத்துச் சென்றனர்.

காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரையும் 15 நிாள் காவலில் வைக்க நீதிபதிஉத்தமராஜா உத்தரவிட்டார்.

ஆனால் கழுதை குறித்து தீர்ப்பு அளிக்கவில்லை. இதனால் குழம்பிய போலீஸார்கழுதையை என்ன செய்வது என்று நீதிபதியிடம் கேட்டனர்.

அதற்கு நீதிபதி அதை நீங்களே வைத்திருந்து நாளை கொண்டு வாருங்கள். இதன்உரிமையாளர் யார் என்ற விவரத்தை தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்போலீஸார் வழக்குப் பதிவு செய்துளளனர்.

இந்தக் கழுதை தூசி கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்குச் சொந்தமானது.இதை குமார் என்பவர் நாடகத்திற்குத் தேவை என்று கூறி ரூ. 300 வாடகை கொடுத்துஅழைத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து கழுதையின் உரிமையாளர் மகாலட்சுமி கூறுகையில்,

கழுதையை நடு ரோட்டில் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிந்து அங்கேபோனேன். ஆனால் அதற்குள் எனது கழுதையை போலீஸார் கைது செய்து அழைத்துச்சென்று விட்டார்கள்.

அப்போது ஓடியபோது கழுதைக்காக குமார் கொடுத்த வாடகை பணமும் கீழேவிழுந்து விட்டது.

இப்போது எனது கழுதையும் போச்சு, பணமும் போச்சு என்று தலையில் கைவைத்தபடி கவலையுடன் கூறினார் மகாலட்சுமி.

இந் நிலையில் வழக்கில் இருந்து கழுதையை விடுவிக்குமாறு போலீசாருக்கு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கழுதை மகாலட்சுமியிடம்ஒப்படைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+