நடிகை மீது தாக்குதல்-ராதாரவிக்கு முன் ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை தேவியைத் தாக்கிய வழக்கில் நடிகர் ராதாரவிக்கு சென்னை உயர்நீதிமன்றம்முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் விஜயகாந்த்தை எதிர்த்துப் போட்டியிட்டவர் நடிகைதேவி. இவர் கடந்த ஆண்டு சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவுக்குப் போனபோதுசிலர் தேவியைத் தாக்கினர்.

விஜயகாந்த், ராதாரவி ஆகியோரது தூண்டுதலின் பேரில் தான் தாக்கப்பட்டதாக தேவிதேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணை சந்தித்துமீண்டும் புகார் கொடுத்தார் தேவி.

இந்தப் புகாரை போலீஸார் தற்போது தூசி தட்டத் தொடங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா, ரூ. 25,000 ரொக்க ஜாமீன், அதேதொகைக்கு இரு நபர் ஜாமீன் வழங்கி முன்ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டார்.

முன்ஜாமீன் பெற்ற பின்னர் தொடர்ந்து 3 நாட்களுக்கு இரவு 7 மணி முதல் 9 மணிவரை தேனாம்பேட்டை போலீஸில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று தனதுஉத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+