ஜெ மீது வழக்கு: சிபிஐ கோரிக்கை குறித்து பரிசீலனை-சபாநாயகர்
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ. 2 கோடி அன்பளிப்பாக வந்தது குறித்துஅவர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு சிபிஐ அனுப்பியுள்ள கோரிக்கைபரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்தநாளையொட்டி வெளிநாட்டிலிருந்து 3 லட்சம் அமெரிக்க டாலர் (கிட்டத்தட்ட ரூ. 2கோடி) பரிசாக வந்தது.இந்தப் பணம் குறித்து வருமான வரித்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்தார்ஜெயலலிதா. இது தொடர்பாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. ஆனால் அதன் பின்னர்விசாரணை நடைபெறவே இல்லை.
இந் நிலையில் இதுதொடர்பாக மீண்டும் விசாரணை மேற்கொள்ள சிபிஐ முடிவுசெய்துள்ளது. ஜெயலலிதா மீதான வழக்கில் மேல் விசாரணைக்கு அனுமதி கோரிசபாநாயகர் ஆவுடையப்பனுக்கு சிபிஐ தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று செய்திாயளர்களிடம் ஆவுடையப்பன் பேசுகையில்,
அனுமதி கேட்டு சிபிஐ அனுப்பியுள்ள கடிதத்துடன், வழக்கு தொடர்பான ஏராளமானஆவணங்களும் என்னிடம் வந்துள்ளது. இவை எனது ஆய்வில் உள்ளன.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்கும். அலுவல்ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என முடிவு செய்யும்என்றார் ஆவுடையப்பன்.












Click it and Unblock the Notifications