For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழறிஞர் குழந்தை நூல்கள் நாட்டுடமை
சென்னை:
தமிழறிஞர் குழந்தையின் நூல்களை நாட்டுடமையாக்க முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார். இதற்காக அவரது குடும்பத்தினருக்கு பரிவுத் தொகையாக ரூ. 10லட்சம் வழங்கப்படும்.
ஈரோட்டில் 1906ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவர் புலவர் குழந்தை. சிறந்ததமிழறிஞரான குழந்தை, தமிழாசிரியராக வேலை பார்த்தவர். ராவண காவியம்உள்ளிட்ட 21 நூல்களை படைத்துள்ளார்.இலக்கிய உலகுக்கும், பகுத்தறிவு சிந்தனைக்கும் இவர் ஆற்றிய தொண்டைப்பாராட்டும் வகையில், அவர எழுதிய நூல்கள், உரை நடை நூல்களைநாட்டுடமையாக்கி கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி அவரது குடும்பத்துக்கு பரிவுத் தொகையாக ரூ. 10 லட்சம்நிதியுதவியும் அளிக்கப்படும்.
மேலும், குழந்தையின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை தமிழக அரசேகொண்டாடும் எனவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
Comments
Story first published: Thursday, June 29, 2006, 5:30 [IST]