மீனாட்சி- பாப்பா சுந்தரம், மகனிடம் மீண்டும் விசாரிக்க முடிவு
கரூர்:
ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கில் குளித்தலை தொகுதி முன்னாள் அதிமுகஎம்.எல்.ஏ பாப்பா சுந்தரம் மற்றும் அவரது மகன் கருணாகரன் ஆகியோரிடம் மீண்டும்விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
![]() |
எலும்புக் கூட்டின் மீது இருந்த சேலை, நகைகள் ஆகியவை மீனாட்சியுடையது என்றுஅவரது கணவர் ஜோதி ராமலிங்கம், அண்ணன் மனைவி பார்வதி, ஆசிரியை சித்ரா,வேலைக்காரி கிருஷ்ணவேணி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து இந்த எலும்புக் கூட்டின் சில பகுதிகளை டி.என்.ஏ. சோதனைக்காகபோலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர். எலும்புக் கூடு புதைக்கப்பட்டிருந்த வாழைத்தோப்பில் பணியாற்றி வரும் 11 ஊழியர்களிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஜோதி ராமலிங்கத்தின் அண்ணன் பசுபதி மற்றும் சில உறவினர்களையும்விசாரிக்க உள்ளனர். அதேபோல முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம்,அவரது மகன் கருணாகரனையும் மீண்டும் தீவிரமாக விசாரிக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.













Click it and Unblock the Notifications