பணிக்கர் சதி: ஐயப்பன் கோவில் பூசாரி புகார்
திருவனந்தபுரம்:
ஐயப்பன் கோவிலில் பிரஸ்னம் பார்க்க வாய்ப்பு அளிக்கப்படாத கோபத்தில்தான்நடிகை ஜெயமாலாவுடன் சேர்ந்து கொண்டு உன்னிகிருஷண பணிக்கர், ஐயப்பன்கோவில் சர்ச்சையை திட்டமிட்டு கிளப்பியுள்ளார் என்று ஐயப்பன் கோவில் தலைமைதந்திரி கண்டேறு மோகனரு குற்றம் சாட்டியுள்ளார்.
இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவல் வெளியானவுடன் கன்னட நடிகை ஜெயமாலா, தான்தான் அந்த பெண்என்பதை ஒப்புக் கொண்டு உனனிகிருஷ்ண பணிக்கருக்கு கடிதம் அனுப்பினார்.இப்போது நடிகை சுதா சந்திரனும், தானும் ஐயப்பன் கோவிலுக்குள் சென்று சாமிகும்பிட்டதாக கூறியிருப்பதால் இந்த சர்ச்சை சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் இந்த முழு சர்ச்சையும், உன்னிகிருஷ்ண பணிக்கரின் திட்டமிட்ட சதிஎன ஐயப்பன் கோவில் மேல்சாந்தியான (தலைமை பூசாரி) கண்டேறு மோகனருகுற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், கடந்த 2001ம் ஆண்டு கோவில் முழுவதும் சுத்தம்செய்யப்பட்டது. ஐயப்பனின் விக்கிரமும் சுத்தப்படுத்தப்பட்டது. அப்போது பிரஸ்னம்பார்த்தபோது ஐயப்பன் மகிழ்ச்சியாக இருந்தது தெரிய வந்தது.
ஆனால் பிரஸ்னம் பார்க்க உன்னிகிருஷ்ண பணிக்கருக்கு அப்போதுவாய்ப்பளிக்கப்படவில்லை.
இதற்கிடையே, நடிகை ஜெயமாலா மற்றும் சுதா சந்திரன் ஆகியோரை விசாரிப்பதுகுறித்து வருகிற ஜூலை 7ம் தேதி திருவாங்கூர் தேவஸ்தான போர்டு ஆலோசிக்கஉள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான ஆணையர் சச்சிதானந்தம் கூறுகையில்,
நடிகைகள் இருவரையும் எப்படி விசாரிப்பது, என்ன முறையில் விசாரிப்பது,அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது உள்ளிட்டவை குறித்து அந்தக் கூட்டத்தில்விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் ஐயப்பன் கோவிலில் பரிகார பூஜைகள் நடத்துவது குறித்தும்ஆலோசிக்கப்படவுள்ளது. இதுதவிர கேரளாவில் உள்ள அனைத்துக் கோவில்தலைமைத் தந்திரிகளுடனும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஐயப்பன் சிலையை தொட்ட நடிகை-கேரளாவில் சர்ச்சை!
நானும் ஐயப்பன் கோவில் சென்றேன்: சுதா சந்திரன்