தமிழகத்தில் முதலீடு-தயாராகிறது டாடா நிறுவனம்
சென்னை:
ரத்தன் டாடாவைத் தொடர்ந்து டாடா வீட்டு வசதி நிறுவன தலைவர் கிருஷணக்குமார்மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை இன்று சந்தித்துப் பேசினார்.
டிடிஎச் விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தன் டாடாவை அமைச்சர் தயாநிதி மாறன்மிரட்டியதாக தேர்தல் நேரத்தில் வைகோ குண்டு போட்டார்.
இந் நிலையில் திடீரென தயாநிதி மாறனை நேற்று டெல்லியில் உள்ள அவரதுஅலுவலகத்தில் டாடா சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் தொழில்முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தயாநதி மாறன் கோரிக்கை விடுத்தார்.
![]() |
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு தொழில் துறைச் செயலாளர் சக்தி காந்த தாஸ்,சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளல் சால்வே ஆகியோரும்உடன் இருந்தனர்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணக்குமார்,
மின்சாரம் உள்ளிட்ட 3 துறைகளில் தமிழகத்தில் தொழில் முதலீடுகளைமேற்கொள்ளுமாறு அமைச்சர் யோசனை தெரிவித்தார். அதுகுறித்து விரிவாகபரிசீலித்து அடுத்த மாதம் விரிவாகப் பேச்சு நடத்தவுள்ளோம்.
தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய டாடா குழுமம் ஆர்வமாக உள்ளது.தற்போது நடந்துள்ளது முதல் கட்டப்பேச்சுதான் என்றார்.













Click it and Unblock the Notifications