யுஜிசி தேர்வு தேதி குளறுபடி-மாணவர்கள் ஏமாற்றம்
சென்னை:
விரிவுரையாளர் பதவிக்கான பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேர்வில் கலந்துகொள்ள வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளில் தேர்வு நாள் தவறாககுறிப்பிட்டிருந்ததால் தேர்வு எழுத வந்தவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக சேர விரும்புவோருக்காகபல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தேர்வு நடத்துகிறது.
![]() |
| தேர்வெழுத வந்து ஏமாந்தவர்களில் சிலர் |
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் இந்தத் தேர்வு நடைபெறும். இந்தஆண்டுக்கான முதல் தேர்வு சென்னை அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் நடைபெறும்என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருந்தவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகளும்அனுப்பப்பட்டு விட்டன.
ஹால் டிக்கெட்டில் 29ம் தேதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் நேற்று இரவேதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் சென்னைக்கு வந்துவிட்டனர்.
இன்று காலை தேர்வு மையத்திற்கு அவர்கள் சென்றபோது பெரும் அதிர்ச்சிகாத்திருந்தது. அங்கிருந்த பேராசிரியர்கள், தேர்வுதான் 25ம் தேதியே முடிந்துவிட்டதே என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டதும் தேர்வுக்காக வந்திருந்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஹால்டிக்கெட்டில் தேர்வு நாள் 29 என்றுதான் போடப்பட்டுள்ளது. சென்னைபல்கலைக்கழகம்தான் இந்த ஹால் டிக்கெட்டுகளை அனுப்பியுள்ளது.
பல்கலைக்கழகம் செய்த இந்த பெரும் தவறால் வெளியூர்களிலிருந்து வந்திருந்தபெண்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வந்து ஏமாந்தவர்களில்நிறை மாத கர்ப்பிணியும் ஒருவர்.
வெளியூர்களிலிருந்து தேர்வு எழுந்த வந்த பல ஆண்களும், பெண்களும் பெரும்அதிர்ச்சியுடன் கல்லூரியிலிருந்து கிளம்பிச் சென்றனர்.













Click it and Unblock the Notifications