கேப்டனின் ரமணா ஸ்டைல் ஊழல் தடுப்பு படை
திருவண்ணாமலை:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஊழல் தடுப்புப் பிரிவுதொடங்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல் குறித்து இங்கு புகார் கொடுக்கலாம் எனவும்,அப்படிப்பட்ட அதிகாரிகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என கட்சித்தலைவர் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் அறிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்ட தேமுதிக கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடந்தது. இதில்கலந்து கொண்ட சுதீஷ், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கட்சியின் சார்பில் ஊழல் தடுப்புப் பிரிவு தொடங்கியுள்ளோம். ஒவ்வொருமாவட்டத்திலும் ஊழல் புரியும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் குறித்து இங்கு மக்கள்புகார் கொடுக்கலாம். புகாருக்குள்ளாகும் அதிகாரிகள் செய்யும் ஊழலைஆதாரத்துடன் கண்டுபிடிப்போம். அதன் பின்னர் ஊழல் தடுப்பு காவல்துறையிடம்புகார் கொடுக்கப்படும்.
அதன் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கிறார்களாஎன்று பார்ப்போம். அப்படி எடுக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். ஊழல்தடுப்புப் பிரிவில் இடம் பெறுவோர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
என்.எல்.சி. மற்றும் தேசிய அலுமினியம் கழக நிறுவனங்களின் 10 சதவீத பங்குகளைதனியாரிடம் விற்பதை எதிர்த்து ஜூலை 1ம் தேதி தேமுதிக சார்பில் நெய்வேலியில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் சுதீஷ்.
தனித்து போட்டி-விஜயகாந்த்:
இதற்கிடையே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தொழிற்சங்கப் பேரவைதொடங்கப்பட்டுள்ளது. பேரவையின் கொடியை வெளியிட்டு பேரவையைத்தொடங்கி வைத்தார் கட்சித் தலைவர் விஜயகாந்த். பேரவையின் தலைவராகவேல்முருகன் செயல்படுவார் எனவும் அப்போது அவர் அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில்,
உள்ளாட்சித் தேர்தல் வருமா, வராதா என்றே தெரியவில்லை. அதற்குள் தேமுதிகஇவர்களுடன் கூட்டு சேருகிறது, அவர்களுடன் கூட்டு சேருகிறது என்று நீங்களாக(பத்திரிக்கைகள்) எழுதி வருகிறீர்கள்.
தேர்தல் நடக்குமா என்பதை உறுதியாக உங்களால் சொல்ல முடியுமா? அப்படிநடப்பதாக இருந்தால் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். யாருடனும் கூட்டணிஅமைக்க மாட்டோம்.
மாவட்டந்தோறும் மாநாடுகள் நடத்த வேண்டும் என்று தொண்டர்கள்விரும்புகிறார்கள். அதுகுறித்து தொண்டர்கள், நிர்வாகிகளுடன் பேசிமுடிவெடுக்கப்படும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். இதை நான்ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். இந்தப் பிரச்சினையில் நான் மிகவும்தீவிரமாக உள்ளேன். பிரச்சினைக்கு தீர்வு வரும் அன்றுதான் எனது பிறந்த நாளைகொண்டாடுவது என்றும் முடிவு செய்துள்ளேன்.
மத்தியில் எந்த அணி அமைந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. 3வது அணிஅமைகிறதா, இல்லையா என்பது எங்களுக்குத் தேவையில்லாதது. எங்களது கட்சிஎதிர்பார்த்த அளவுக்கு வாக்குகளைப் பெறவில்லை. இன்னும் நாங்கள் வளரவேண்டியுள்ளது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்து குறைந்த காலம்தான் ஆகிறது. 6 மாதம் போகட்டும்,அந்த ஆட்சியைப் பற்றிப் பேசுகிறேன். கலர் டிவி திட்டத்தை சொல்லியுள்ளார்கள்.முதலில் டிவியைக் கொடுக்கட்டும். பிறகு அதைப் பற்றிப் பேசுவோம் என்றார்விஜயகாந்த்.
கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோதுவழக்கம்போல் சினிமா பாணியில் கோபமடைந்த விஜயகாந்த்,
திட்டம் இல்லாமலா கட்சியை ஆரம்பித்திருப்பேன்? அதையெல்லாம் உங்களிடம்சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதுஎனக்குத் தெரியும். அதைப் பற்றி எல்லாம் உங்களிடம் விவாதிக்க முடியாது என்றார்.