ஸ்கூல் பிரச்சனை: மகனுடன் மாயமான பெண்!
சென்னை :
![]() |
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் சேகர் (28). இவரது மனைவி சுனிதா(24). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி சென்னை அருகே குன்றத்தூரில்வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு வெங்கடேசன் என்ற 6வயது மகன் உள்ளான்.
சேகர் சமையல் காண்டிராக்ட் தொழில் செய்து வந்தார். சிக்கனமாக செலவு செய்யும்பழக்கம் உடைய சேகர், தனது மகனை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கமுடிவு செய்தார். இதற்கு சுனிதா எதிர்ப்பு தெரிவித்தார்.
![]() |
இதனால் கோபமடைந்த சுனிதா கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில், சுனிதாவும், வெங்கடேசனும், கடந்த 4ம் தேதி முதல் காணவில்லை.பதறிப் போன சேகர், சொந்த மாநிலமான ஆந்திராவுக்குச் சென்று தேடியுள்ளார்.ஆனால் அங்கு சுனிதா வரவில்லை.
இதையடுத்து குன்றத்தூர் திரும்பிய அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன தாயையும்,மகனையும் தேடி வருகின்றனர்.














Click it and Unblock the Notifications