நாளை விண்ணில் பாய்கிறது டிஸ்கவரி!
புளோரிடா:
7 விண்வெளி வீரர்களுடன் அமெரிக்காவின் விண்வெளி ஓடமான டிஸ்கவரி இந்தியநேரப்படி நாளை மாலை 3.49 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
புளோரிடா மாநிலம் கேப் கேனரவல் விண்கல ஏவு தளத்திலிருந்து டிஸ்கவரிஏவப்படும்.
வானிலை சரியாக இருந்தால் திட்டமிட்ட நேரத்தில் டிஸ்கவரி ஏவப்படும். நாசா மையசோதனை இயக்குனர் ஜெப் ஸ்பால்டிங் கூறுகையில்,
![]() |
இருப்பினும் திட்டமிட்ட நேரத்தில் டிஸ்கவரியை ஏவுவதற்கான வாய்ப்பு 60 சதவீதம்மட்டுமே உள்ளதாகவும், விண்கலத்தை ஏவுவது 24 மணி நேரம் தள்ளிப் போகக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
2003ம் ஆண்டு கொலம்பியா விண்வெளி ஓடம் பூமி திரும்புகையில் வெடித்துச்சிதறியதையடுத்து இரு ஆண்டுகள் ஸ்பேஸ் ஷட்டில்களை தரையிறக்கி வைத்ததுநாசா.
பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிஸ்கவரி விண்ணுக்குச் சென்றது. திரும்பிவரும்போது விண்கலத்தின் வெளிப்புறம் உள்ள வெப்பத் தடுப்பு சாதனத்தின் சிலபகுதிகள் உடைந்து விழுந்ததால் பூமியில் இறங்கும்போது விபத்து ஏற்படும் எனஅஞ்சப்பட்டது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த ஆபத்து நேராமல், பத்திரமாக தரையிறங்கியதுடிஸ்கவரி.
இதையடுத்து கடந்து ஒரு வருடமாக ஸ்பேஸ் ஷட்டில் விண்வெளிக் கலங்களை நாசாவிண்ணுக்கு அனுப்பவில்லை. வெப்பத் தடுப்பு பகுதிகள் சேதம் அடையாமல்இருப்பதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளில் விண்வெளி ஆய்வுநிறுவனமான நாசா தீவிர கவனம் செலுத்தியது.
இப்போது தான் மீண்டும் ஒரு விண்வெளிப் பயணத்திற்கு ஸ்பேஸ் ஷட்டில் டிஸ்கவரிதயாராகி உள்ளது.













Click it and Unblock the Notifications