திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு டைல்ஸ்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவல நடைபாதையில் டைல்ஸ் கற்களைப் பதித்து பக்தர்களுக்குவசதி ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 2 கோடி செலவில் இந்தப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
![]() |
அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டுதிருவண்ணாமலையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும்திருவண்ணாமலையை ஆன்மீக நகராகவும் மாற்ற மத்திய, மாநல அரசுகள்நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக கிரிவலம் வரும் பாதை விசாலமாக்கப்பட்டு, தெருவிளக்குகள்அதிக அளவில் போடப்பட்டன. பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர் வசதிகளும்செய்து தரப்பட்டுள்ளன. தற்போது இன்னும் சில வளர்ச்சிப் பணிகள்மேற்கொள்ளப்படவுள்ளன.
கிரி வலப் பாதை நெடுகிலும் செயற்கை நீரூற்றுக்களுடன் கூடிய பூங்காக்கள், கோவில்குளங்களை சீர்படுத்தி அழகுபடுத்துவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.மேலும், தங்கும் விடுதி ஒன்றையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிரிவலப் பாதை மேம்பாட்டுக்காக ரூ. 5 கோடி நிதியை மத்திய சுற்றுலாத் துறைஒதுக்கியுள்ளது. இதில் 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள கிரிவலப் பாதையின்நடைபாதை முழுவதும் டைல்ஸ் கற்கள் பதிக்கப்படவுள்ளன.
இந்தப் பணிக்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்படவுள்ளது. சாலையோரம் உள்ள மரங்களைஅகற்றாமல் மரங்களுக்கு இரு பக்கமும் உள்ள நிலத்தில் டைல்ஸ் நடைபாதைஅமைக்கப்படும். இப்பணிக்காக தல் கட்டமாக ரூ. 90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்ணா நுழைவாயில் பகுதியில் அடுத்த வாரம் இந்தப் பணி தொடங்குகிறது.













Click it and Unblock the Notifications