ஜனனி, ஜமீன்தார் வீடுகளில் சோதனை!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கள்ள நோட்டு வழக்கு தொடர்பாக ஜனனி, நெல்லை மாவட்டம் கடம்பூர் ஜமீன்தார்ஜெகதீஷ் ராஜா ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்துவார்கள்என்று தெரிகிறது.
ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ், ஜனனிக்கு பணம் தந்ததாகக்கூறப்பட்ட கடம்பூர் ஜமீன்தார் ஜெகதீஷ் ராஜா ஆகியோர் மீது 3 பிரிவுகளில் கள்ளநோட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜனனியிடம் கைப்பற்றப்பட்ட கரன்சி நோட்டுக்களை நாசிக் எடுத்துச் சென்று அங்குரிசர்வ் வங்கி வெளியிடாமல் வைத்துள்ள ரூபாய் நோட்டுக்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கவும் சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இந்த கள்ள ரூபாய் நோட்டுக்களை வட நாட்டுக் கும்பல் அச்சடித்து புழக்கத்தில்விட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் போலீஸாரிடம் உளளது.
இந் நிலையில், ஜனனியின் சென்னை, மதுரை வீடுகளிலும், ஜெதகீஷ் ராஜாவின்கடம்பூர் வீட்டிலும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீஸார் தீர்மானித்துள்ளதாகத்தெரிகிறது.
இதற்கிடையே ஜமீன் ஜெகதீஷ் ராஜா தொடர்ந்து தலைமறைவாகவே இருந்துவருகிறார்.












Click it and Unblock the Notifications