காளிமுத்து மீது வருகிறது ஊழல் வழக்கு!
சென்னை:
தமிழக சட்டசபை செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தது தொடர்பாக ன்னாள்சபாநிாயகர் காளித்து மீது வழக்குப் போடப்படும் எனத் தெகிறது.
தமிழக சட்டசபைக்கு தனிச் செயலகம் உள்ளது. இங்கு செயலாளர், இணைச்செயலாளர் மற்றும் பல்வேறு துணைச் செயலாளர்கள், உதவியாளர்கள் எனஏராளமான ஊழியர்கள் உள்ளனர்.இந்த செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை நியமிக்க சபாநாயகருக்கு உரிமைஉள்ளது. முன்பு இந்த செயலகத்தில் நீண்ட காலமாக தற்காலிக ஊழியர்களாக இருந்தபலரை கடந்த திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்நிரந்தரமாக்கினார்.
இந் நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில், காளிமுத்து சபாநாயகராக இருந்தபோது,தற்காலிக பணியாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர்.
அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களிடம் குறைந்தது ரூ. 1 லட்சம் என பணம்வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் தற்போதைய அரசால்சேகரிக்கப்பட்டு வருகிறது.
பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களே இதுதொடர்பாக தக்க ஆதாரங்களுடன்அரசிடம் புகார் கொடுத்தவண்ணம் உள்ளனர். இந்த புகார்களின் அடிப்படையில்காளிமுத்து மீது வழக்குத் தொடரப்படும் என பேச்சு அடிபடுகிறது.
இதை நிரூபிப்பது போல இன்றைய முரசொலி நாளிதழில் அசை போடுக பழையநினைவுகளை என்ற தலைப்பில் கருணாநிதி ஒரு கவிதை எழுதியுள்ளார். காளிமுத்துகுறித்த கவிதை அது. அதில்,
கடை நிலை ஊழியர் வேலைக்கு
ஆள் வைத்ததிலும், கை நீட்டி நீர் வாங்கிய தொகைக்கு
கணக்கே இல்லையென்று கொடுத்தவர் எல்லாம்
வழக்கு தொடுத்திட தயாராக
அடுத்தடுதது வரப் போகின்றார்
தடுத்திட முடியாது உம்மால்.
கோப்புகள் உண்டு நிரம்ப
உம் குற்றங்களை கடைவிரிக்க
என்று வரிகள் ஓடுகின்றன. எனவே விரைவில் காளிமுத்து மீது ஊழல் வழக்குபாய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications