மணல் லாரியால் பலியான ஏட்டு வாரிசுக்கு வேலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
பெரியபாளையம் கடைத்தெருவில் ரோந்து பணியில் இருந்த போது லாரி ஒன்று பெரியாளையம் தலைமைக்காவலர் அண்ணாமலை மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மோதிய லாரியை தேடும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது.பலியான தலைமைக் காவலர் குடும்பத்தினருக்கு கருணாநிதி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ. 1 லட்சம் வழங்கவும் ஆணையிட்டுள்ளார். மேலும் அவரின் குடும்பத்தில்உள்ள ஒருவருக்கு கருணை அடிப்படையில் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு அரசுப் பணி வழங்குவது குறித்துஉடனடியாக பரிசீலிக்கவும் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications