லதிகா சரணிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்
சென்னை:
குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி பதிவுத் திருமணம் செய்து கொண்ட இரண்டு காதல் ஜோடிகள் போலீஸ்கமிஷனர் லத்திகா சரணிடம் தஞ்சம் அடைந்தனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மகேஸ்வரன் (21), டிசைனராக உள்ளார். பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சரண்யா(21). இவர்கள் இருவரும் காலையில் சென்னையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நோராகபோலீஸ் கமிஷனரிடம் தஞ்சம் அடைந்தனர். கமிஷனரிடன் சரண்யா அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
![]() |
பயிற்சி முடித்ததும் மகேஸ்வரன் வேலையில் சேர்ந்தார். ஜாதி பிரச்னை காரணமாக எனது காதலை எதிர்த்த எனதுபெற்றோர். எனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதனால் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என அவர் கூறினார்.
அதே போல குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த சென்னை பம்மலை சேர்ந்த நரேந்திரன் (22),ரேணுகா (20) இருவரும் கமிஷனரை சந்தித்தனர்.
![]() |














Click it and Unblock the Notifications