லதிகா சரணிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி பதிவுத் திருமணம் செய்து கொண்ட இரண்டு காதல் ஜோடிகள் போலீஸ்கமிஷனர் லத்திகா சரணிடம் தஞ்சம் அடைந்தனர்.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மகேஸ்வரன் (21), டிசைனராக உள்ளார். பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சரண்யா(21). இவர்கள் இருவரும் காலையில் சென்னையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நோராகபோலீஸ் கமிஷனரிடம் தஞ்சம் அடைந்தனர். கமிஷனரிடன் சரண்யா அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,

Saranya with Magesh
என்னுடைய அப்பா திருமலைச்சாமி மதுரையில் தேனா வங்கியில் அதிகாரியாக உள்ளார். நான்ராயப்பேட்டையில் உள்ள கால் சென்டரில் பயிற்சி பெற்றேன். அப்போது மகேஸ்வரனுடன் எனக்கு காதல்மலர்ந்தது.

பயிற்சி முடித்ததும் மகேஸ்வரன் வேலையில் சேர்ந்தார். ஜாதி பிரச்னை காரணமாக எனது காதலை எதிர்த்த எனதுபெற்றோர். எனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதனால் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என அவர் கூறினார்.

அதே போல குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த சென்னை பம்மலை சேர்ந்த நரேந்திரன் (22),ரேணுகா (20) இருவரும் கமிஷனரை சந்தித்தனர்.

Renuga with Narenthiran
கடந்த 26ம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்ட தங்களை, நரேந்திரனின் அண்ணன் மிரட்டுவதாககமிஷனரிடம் புகார் செய்தனர். இந்த இரண்டு ஜோடிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று போலீஸ்கமிஷனர் உறுதியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+