முஸ்லீம்-கிருஸ்துவர் கூட்டு: இராம.கோபாலன்
சென்னை:
குடும்பக் கட்டுப்பாட்டை அனைத்து மதத்தினருக்கும் கட்டயாமாக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றவேண்டும் என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம. கோபாலன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சமீபத்தில் கத்தோலிக்க திருச்சவை பிஷப் பீட்டர் பெர்னாண்டோ அளித்த பேட்டியில், ஜெயலலிதா ஆட்சியில்பட்ட வேதனைகள், வடுக்கள் இன்னும் ஆறவில்லை. நாங்கள் அரசியல் களத்திற்கு வந்தாலும், எங்கள் நலனில்அக்கறை கொண்ட கருணாநிதி அரசை குறை சொல்ல மாட்டோம்.
தமிழகத்தில் கிறஸ்தவர்கள் 65,00,00 பேரும், முஸ்லிம்கள் 1 கோடி பேரும் சேர்ந்தால் ஆட்சி மாற்றத்தைஉருவாக்க முடியும் என கூறியுள்ளார். இதைக் கேட்ட பிறகாவது இந்துகளின் அறிவுக் கண் திறக்கும் என்றுஎதிர்பார்க்கிறோம். இருவரும் கைகோர்த்துக் கொள்வது என்பது கற்பனை அல்ல. நிஜம் தான் என்பதுதெளிவாகிறது.
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சேர்ந்தால் ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியும் என்றால் என்ன பொருள்?
மத அடிப்படையில் அனைத்துக் கட்சிகளின் கையையும் முறுக்கி, தங்களுக்கு சாதகமான அரசை உருவாக்கமுடியும் என்பது தானே அர்த்தம். மதமாற்றம், பல மனைவி திருமணம், அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது ஆகியவற்றின் காரணமாக இந்த ஜனத் தொகை வளர்ந்துள்ளது என்பது உண்மை.
எனவே குடும்பக் கட்டுப்பாட்டை அனைத்து மதத்தினருக்கும் கட்டாயமாக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம்இயற்ற வேண்டும் என ராமகோபாலன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications