சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படித்த பள்ளி இடிந்தது!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படித்த பள்ளிக் கூடம்திடீரென இடிந்து விழுந்தது. வகுப்புகள் முடிந்த பின்னர் பள்ளிக்கூடம் இடிந்ததால்மாணவர்கள் உயிர் தப்பினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆலமரத் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி 1875ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்குதான்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 5ம் வகுப்பு வரை படித்தார்.

இப்பள்ளியில் தற்போது 8ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 392 மாணவ, மாணவியர்படிக்கிறார்கள். 9 ஆசிரியர்கள் உள்ளனர். மிகப் பழமையான கட்டடத்தில் இயங்கிவரும் இப்பள்ளியின் கட்டடத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பே விரிசல் விட்டுவிட்டது. எந்த நிேரத்திலும் கட்டடம் இடியும் நிலை இருந்து வந்தது.

இதுதொடர்பாக அரசு எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது.

இந் நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பலத்த சூறைக் காற்றுடன் கன மழைபெய்தது. இதில் 8ம் வகுப்பின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. பள்ளி முடிந்தபின்னர் கட்டடம் இடிந்ததால் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இல்லாவிட்டால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். கட்டட இடிபாடுகள் இன்னும்கூட அகற்றப்படாமல் உள்ளன. அதிகாரிகள் அந்த அளவுக்கு அலட்சியமாகஇருப்பதாக ஆசிரியர்களும், மாணவர்களும் குமுறல் தெரிவித்துள்ளனர்.

கட்டடம் இடிந்து விட்டதால் 1, 2 மற்றும் 8ம் வகுப்புகள் மரத்தடியில் நடந்துவருகின்றன. ஏற்கனவே மற்ற வகுப்புகள் அனைத்தும் மேற் கூரை இல்லாமல்தான்நடந்து வருகின்றன.

ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைத்தான் ஆசிரியர் தினமாக நாடு கொண்டாடிவருகிறது. ஆனால் அவர் படித்த பள்ளிக்கு இப்படி கிடக்கிறது.

ஆசிரியர் தினத்தை கொண்டாட தமிழக கல்வித்துறை என்ன உரிமை உள்ளது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+