For Quick Alerts
For Daily Alerts
Just In
பள்ளி மினி பஸ் கவிழ்ந்து மாணவன் பலி
காரமடை:
பள்ளி மினி பஸ் கவிழ்ந்து மாணவன் பலியானான். ஆசியிரியை, டிரைவர் மற்றும் 13 குழந்தைகள் படுகாயம்அடைந்தனர்.
கோவை காரமடை உன்னிபாளையம் சாலையில் ஜே.பி.எஸ் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. நேற்று காலைமாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.சின்னபுத்தூர் எம்ஜிஆர் காலனி திருப்பத்தில் வந்தபோது, பள்ளத்தில் பஸ் திடீரென கவிழந்தது. இதில் டிரைவர்ஒரு ஆசிரியை மற்றும் 14 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த தகவல் அறிந்த தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் 6ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கோபாலகிருஷ்ணன், மேட்டுபாளையம் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆசிரியைை பவிதாவும், காயமடைந்த மற்ற மாணவர்களும் கோவை தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். வேகமாக சென்று, வளைவில் திரும்பியதால் பஸ் கவிழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில்தெரிய வந்துள்ளது.
Comments
Story first published: Sunday, July 2, 2006, 5:30 [IST]