கருணாநிதியை சந்திக்கும் இலங்கை துணை தூதர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை அகதிகள் குறித்தும், ராமேஸ்வரம் மீனவர்கள் அடிக்கடி இலங்கைகடற்படையினரால் தாக்கப்படுவது குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேசதிட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதராக புதிதாகநியமிக்கப்பட்டுள்ள அம்சா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதராக அம்சா இன்று பொறுப்பேற்றுக்கொணடார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தமிழக முதல்வரை சந்தித்து பேச்சுநடத்துவேன். அதேபோல, அகதிகள் வருகை குறித்தும் அவருடன்ஆலோசிக்கப்படும்.

தென்னிந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாரம்பரியத் தொடர்புகள் உள்ளன.இதை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அம்சா.

மேலும் 93 அகதிகள் வருகை:

இதற்கிடையே இன்றும் இலங்கையிலிருந்து மேலும் 93 அகதிகள் தமிழகம் வந்தனர்.

இலங்கையில் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தினசரி அங்கிருந்துஏராளமான தமிழர்கள் தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையிலிருந்து தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளுக்கு 93அகதிகள் வந்தனர். 32 குடும்பங்களைச் சேர்ந்த இவர்களில் 36 பேர் ஆண்கள், 33பேர் பெண்கள், 24 குழந்தைகள் இருந்தனர்.

அனைவரும் திரிகோணமலை, மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.படகுக்கு வாடகையா தலா ரூ. 10,000 கொடுத்து தமிழகம் வந்ததாக அவர்கள்தெரிவித்தனர்.

இலங்கையில் நிலைமை மோசமாகி வருவதாகவும், தமிழர்களின் உயிர் மற்றும்உடமைக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் அகதிகள்தெரிவித்தனர்.

விசாரணைக்குப் பின்னர் அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+