ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும்: தா.பாண்டியன்
சென்னை:
ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம்கொண்டு வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்தா.பாண்டியன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடிகை ஜெயாமலா, சபரிமலை ஐயப்பன்கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலையை தொட்டு வணங்கியது தொடர்பாக சர்ச்சைஎழுந்துள்ளது.கோவில் ஆச்சாரம், சடங்குகள் குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை.
ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆண், பெண் அனைவருக்கும்அடிப்படை உரிமை உள்ளது. இதன் அடிப்படையில், பெண்களையும் ஐயப்பன்கோவிலுக்குள் அனுமதிப்பதற்கு வகை செய்யும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டுவரலாம்.
என்.எல்.சி. நிறுவனம் மினி ரத்னா என்று கூறக் கூடிய தர வரிசையில் உள்ளது இப்படிலாபத்தில் இயங்கும் இந் நிறுவனத்தின் பங்குகளை தனியாரிடம் விற்க மத்திய அரசுமுடிவு செய்திருப்பது தவறான செயல். இதில் நியாயமே இல்லை. இதனை நாங்கள்அனுமதிக்கவும் முடியாது.
தமிழக மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக இதை நாங்கள் கருதுகிறோம். இதைத்தடுக்க மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து கடலூர் மாவட்டத்தில் கண்டனஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
10ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் தா.பாண்டியன்.












Click it and Unblock the Notifications