நெட் காதல்-சென்னைக்கு ஓடி வந்த லண்டன் பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இன்டர்நெட் மூலம் மலர்ந்த காதலினால் சென்னை வந்துள்ள லண்டன் காதலியையும், அவரது காதலனையும்போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

லண்டனைச் சேர்ந்தவர் சாமுவேல். தமிழகத்தை சேர்ந்த இவர் அங்கு தொழிலதிபராக உள்ளார். இவரது மனைவிகிராபோர்டு. இவர்களது மகளுக்கும், சென்னை பெரம்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இண்டர்நெட் சாட்டிங்மூலம் பழக்கம் ஏற்பட்டது.

Crawford
சென்னைக்கு தப்பி வந்த பெண்ணின் தாயார் கிராபோர்ட் சாமுவேல்

இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் இ-மெயில் மூலம் நன்றாக தெரிந்து கொண்டனர். புகைப்பட பரிமாற்றமும்நடந்துள்ளது. முதலில் நட்பில் தொடங்கிய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனாலும்காதலை தொடர்ந்தார் மகள்.

இந்த நிலையில் மகளுக்கு அவர்கள் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். இதை அந்தப் பெண் அவர் தனதுகாதலனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து இந்தியாவுக்கு வந்துவிடுமாறு அந்த வாலிபர் கூறவே அந்தப் பெண் அங்கிருந்து தப்பி சென்னைவந்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் தாயார் கிராபோர்டு சாமுவேலும் சென்னை புறப்பட்டு வந்துள்ளார்.சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் தனது மகளை கண்டு பிடித்து தருமாறு புகார் கொடுத்தார்.

ஆனால், அந்த வாலிபரின் முழு விவரமும் கிராபோர்டுக்குத் தெரியவில்லை. இதனால் இ-மெயில் முகவரியைமட்டுமே போலீசாரிடம் கொடுத்துள்ளார்.

இதை வைத்துக் கொண்டு சைபர் க்ரைம் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+