வருமான வரி வழக்கு-விடுவிக்க கோரி ஜெ மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமான வரி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதாசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

1991-92 மற்றும் சில ஆண்டில் வருமான வரி கணக்கை குறித்த காலத்தில்காட்டவில்லை என்று ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதும், சசி எண்டர்பிரைசஸ்மீதும் வருமான வரித்துறை 1997ல் வழக்கு தொடர்ந்தது.

இவர்கள் மீது மொத்தம் 4 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும்சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றிவியல் நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ளன.

இந்த வழக்கை 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றுஜெயலலிதா, சசிகலா ஆகியோர் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில்மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜூ, ஜெ-சசியைவிடுவிக்க முடியாது என்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களையும், ஆவணங்களையும் பார்க்கும்போதுஇருவர் மீதும் வழக்கு தொடருவதற்கு போதுமான அடிப்படை முகாந்திரங்கள்உள்ளன என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கின் உண்மை நிலை இன்னும் கண்டறியப்படவில்லை என்றும்,விசாரணையின் போது நிரபராதிகள் என்று நிரூபிக்க இருவருக்கும் போதியவாய்ப்புகள் வழங்கப்படும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

இந் நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதாநேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் இந்த மனு மீதானவிசாரணை முடியும் வரை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் ஜெயலலிதா, சசிகலா மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்குஇன்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜெ-சசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி,

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவும் சசிகலாவும்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நிலுவையில்உள்ளதால் இந்த வழக்கை 3 மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.

அப்போது பேசிய வருமான வரித்துறை வழக்கறிஞர் ராமசாமி, இந்த வழக்கைவிரைந்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவாக குற்றச்சாட்டுகள்பதிவு செய்ய வேண்டும். ஜெயலலிதா தரப்பில் அடிக்கடி வாய்தா கேட்பதால்குற்றச்சாட்டு பதிவு செய்வது தாமதமாகிக் கொண்டே செல்கிறது. இந்த வழக்குக்குகால நீடிப்பு தந்தால் அது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாக அமைந்துவிடும்என்றார்.

இதையடுத்து வழக்கை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+