என்.எல்.சி. ஸ்டிரைக்: மின் உற்பத்தி ஸ்தம்பிப்பு!

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி:

நெய்வேலி அனல் மின் கழக ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம்தொடங்கியது. இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

என்.எல்.சி. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு ஒப்படைப்பதைஎதிர்த்து அந் நிறுவனத்தில் பணியாற்றும் 36,000 ஊழியர்களும் நேற்று இரவு 10மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.

பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட36,000 ஊழியர்கள்பணிக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளதால் மின் உற்பத்தி அடியோடுஸ்தம்பித்துப் போயுள்ளது.

மொத்தம் உள்ள 3 அனல் மின் நிலையங்களும் ஸ்தம்பித்துள்ளன. நிலக்கரி வெட்டிஎடுக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பணிகளுக்காக 50 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்திசெய்யப்பட்டு வருகிறது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் கடும்மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து என்.எல்.சி. வளாகத்தில மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாதவகையில் பெருமளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மொத்தம் 18 மாவட்டங்களிலிருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தவிர மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 1500 பேரும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

என்.எல்.சி. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலியில் இன்று முழுஅடைப்பும் நடந்து வருகிறது.

நகர் முழுவதும் கடைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பஸ்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+