ரம்பா: அன்பு போட்ட வழக்கு தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பைனான்சியர் அன்புச் செழியன் போட்டுள்ள அவதூறு வழக்கிலிருந்து தன்னைவிடுவிக்க வேண்டும் என்று கோரி நடிகை ரம்பா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை ஜுலை 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திரைப்பட வினியோகஸ்தர், பைனான்சியர் என பல அவதாரங்களுடன் செயல்படும்அன்புச் செழியன குறித்து வாரப் பத்திரிக்கை ஒன்றில் நடிகை ரம்பா பேட்டிகொடுத்திருந்தார்.
இதையடுத்து ரம்பா மீது மதுரை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் அன்புச் செழியன்மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
![]() |
ஆனால் ரம்பா ஆஜராகவில்லை. அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறிஅவரது வழக்கறிஞர்கள் நாகராஜன், அம்சபாண்டியன் ஆகியோர் மனு தாக்கல்செய்தனர்.
அதேபோல அன்புவும் ஆஜராகவில்லை.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வரும் 14ம் தேதிக்கு நீதிபதிஒத்திவைத்தார்.













Click it and Unblock the Notifications