எஸ்எஸ்சந்திரன் ஜாமீன்-விசாரணை ஒத்திவைப்பு
மதுரை:
அதிமுக எம்.பி. எஸ்.எஸ்.சந்திரன் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதானவிசாரணை வருகிற 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுட்டுள்ளது.
எஸ்.எஸ்.சந்திரன், அவரது மகள் கண்மணி உள்ளிட்ட 7 பேர் மீது மதுரையைச் சேர்ந்தலதா என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். லதா, எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகன்தனசேகரனின் மனைவி ஆவார்.தனது புகார் மனுவில், கணவர் தனசேகரன், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்டோர் தன்னைகூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறியிருந்தார்.
இப் புகாரன் பேரில் சென்னை சென்ற மதுரை போலீஸார் சந்திரன் வீட்டில் இருந்ததனசேகரனைக் கைது செய்தனர். எஸ்.எஸ்.சந்திரன் தலைமறைவாகி விட்டதால்அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரைப் பிடிக்க தனிப்படைகளும்அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் முன் ஜாமீன் கோரி எஸ்.எஸ். சந்திரன், அவரது மகள் கண்மணிஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றுகோரினார். இதற்கு எஸ்.எஸ்.சந்திரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எதிர்ப்புதெரிவித்தனர்.
இருப்பினும் அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி ரகுபதி, விசாரணையைவருகிற 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications